Wednesday, February 18, 2009

வார்த்தைகள் வலிமையானதா?

சரியான நேரத்தில், சரியான நோக்கத்தில் வெளிப்படும் வார்த்தைகள் வலிமையானதுதான். மகாத்மா காந்தியின் சீடர்களில் முக்கியமானவர் வினோபா பாவே. தெலுங்கானாவில் நில மீட்புக்கான ஆயுத போராட்டம் உச்சத்தில் இருந்த காலகட்டம். அப்போது பாதிக்கப்பட்ட போச்சம்பள்ளி கிராமத்துக்கு வினோபா வந்திருந்தார். அன்று மாலை நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் உபரி நிலங்களை தாருங்கள் என நில சுவான்தாரர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அப்போது ஒருவர் ஐந்து ஏக்கர் நிலத்தை பூமி தான இயக்கத்திற்கு தருவதாக அறிவித்தார். அவரிடம் வினோபா பாவே அவரது குடும்பத்தில் எத்தனை பேர் எனக் கேட்டார். அவரும் நான்கு பேர் எனத் தெரிவித்தார். மொத்தம் எவ்வளவு நிலம் எனக் கேட்டார். ஐநூறு ஏக்கர் என அவரும் தெரிவித்தார். என்னையும் உங்களது சகோதரராக ஏற்றுக்கொண்டு எனக்கான பங்கினை தரமாட்டீர்களா எனக் கேட்டார். நெகிழ்ந்து போன அவரும் வினோபா பாவேவினை சகோதரராக ஏற்று பூமிதான இயக்கத்திற்கு 500 ஏக்கர் நிலத்தினை தானமாக அளித்தார். வலிமையான வார்த்தைகளில் இருந்தே அந்த இயக்கம் ஆரம்பித்தது.

No comments:

Post a Comment